சனி, 8 மே, 2010

நீ போனாலும்.......
கடற்கரையெங்கும்
பரந்து கிடக்கும் 

உன்
சிரிப்பென்னும்
கிளிஞ்சல்களை
கைநிறைய அள்ளுகிறேன்!

காதல்எனும்
மணல் வீட்டை
திரும்ப திரும்ப கட்டுகிறேன்
"இல்லை"எனும் அலைகள்
இனிவராது இருக்கலாம்!

பார்வையெனும்
சிறு குழிகள்
கரையோரம்
தோண்டுகிறேன்
கிடைப்பதென்னவோ
கண்ணீர்எனும்
அதே உப்புநீர்தான்!

மணல்வெளியெங்கும்
உன் பாதத்தின்
சுவடுகளையாவது
விட்டுசெல்
முன்னறிவிப்பின்றி
உன்போல்
போகமுடியாதென்னால் ! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக