தோளில் நீ சாய்கையில்
சில்லென்று
ஒரு தென்றலும்
என்னை
சுற்றி சுழன்றது,
என்
கை பிடித்து நடக்கையில்
பரந்த வானமும்
எந்தன்
காலடியில் சிறைப்பட்டது,
ஒவ்வொரு
புன்னகை பூவிலும்
ஆயிரம் மலர்கள்
என்னுள் பூத்தது,
ஆயிரம் வேள்விகள் புரிந்தாலும்
கிடைக்கா வரமா
நீ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக