செவ்வாய், 25 மே, 2010

தோளில் நீ சாய்கையில்
சில்லென்று 

ஒரு தென்றலும்
என்னை 

சுற்றி சுழன்றது,

என் 
கை பிடித்து நடக்கையில்
பரந்த வானமும் 

எந்தன்
காலடியில் சிறைப்பட்டது,

ஒவ்வொரு 
புன்னகை பூவிலும்
ஆயிரம் மலர்கள்
என்னுள் பூத்தது,

ஆயிரம் வேள்விகள் புரிந்தாலும்
கிடைக்கா வரமா 

நீ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக