சனி, 1 அக்டோபர், 2011


பொறுக்கவே
முடியவில்லை

என் மறதிகளை
நீ கொட்டித்தீர்த்த
ஞாபகங்கள்

அவ்வளவும்
அளவில்ல பொக்கிசங்கள்.



அழும் குழந்தையைக்கூட
அழகாய் சிரிக்கவைத்து
புகைப்படம் எடுக்க தெரிந்த
கலைஞன் நான்



எப்படி
உன் அழகான
புன்னகை மட்டும்
புரியாமல் போனது
எனக்கு!.