சனி, 11 செப்டம்பர், 2010

நீ 
என்னை
பிரிந்துவிடுவாய்
என்று முன்பே எனக்கு
தெரிந்திருந்தால்,

உனக்கென்று
ஒளித்து வைத்த
என் காதல்
அனைத்தையும்
அன்றே உனக்கு
கொடுத்திருப்பேன்!

உன் 
பெயர்சொல்லி
மூடிவைத்த
என் மீதி  காதல்
அனைத்தையும்-நான்
இன்று என்ன செய்வது?

என் 
மனதில்
பெருகி வழியும்
உன்  நினைவுகளை
நான் என்ன செய்வது?

உன் 
நினைவுகளிலிருந்து
விலகி  ஓடுகிறேன்
ஓடினாலும்
இறுதியில்
உன்  நினைவின்
வாசலிலே வந்து
நிற்க வைத்து விடுகிறாய்!

என்
மனதின்
ஒவ்வொரு
அசைவிலும் உன்னையே
உணர்ந்து கொண்டிருக்கிறேன்
உன் மௌனத்தின் குரல்களே
இன்னமும் என்னில்
ஒலித்துக்கொண்டிருக்கிறது
உனை பிரிந்து
காலங்கள் பல கடந்துவிட்டது
இன்றும் என்னிடம்
எதுவேமே இல்லை!
“நீ”– என்ற சொல்லைத் தவிர!!!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக