சனி, 1 அக்டோபர், 2011


பொறுக்கவே
முடியவில்லை

என் மறதிகளை
நீ கொட்டித்தீர்த்த
ஞாபகங்கள்

அவ்வளவும்
அளவில்ல பொக்கிசங்கள்.



அழும் குழந்தையைக்கூட
அழகாய் சிரிக்கவைத்து
புகைப்படம் எடுக்க தெரிந்த
கலைஞன் நான்



எப்படி
உன் அழகான
புன்னகை மட்டும்
புரியாமல் போனது
எனக்கு!.

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

உன் வருகைக்காக
காத்திருப்பது
நான் மட்டும்
அல்ல,

எனக்கு துணையாய்
நீ கொடுத்து விட்ட
சென்ற
கடைசி முத்தமும் தான்!


பயணங்களில் கலையும்
என் கூந்தலை
சரி செய்கிறேன்
என்று
என் வெட்கங்களை
கலைத்து
விட்டு செல்கிறாய்!


திங்கள், 21 பிப்ரவரி, 2011

ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் .,
இறந்தாலும்...
நினைத்த கணத்தில்
கலங்க வைக்கும் ...

அவளின் ..பிரிவு!.




உலக வரைபடத்தில்
கடல் நீரால்
காணமல் போன
என் தேசம் நீ....?

உன்னால்
கைவிடப்பட்ட
தீவாய் நான்......!!!




ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

இன்று

இன்று

எல்லா உறவுகளும்,
என்னோடிருக்கிறது
ஆனாலும்
தனிமையில் தவிக்கிறேன்

நீ
இல்லாததால்!


வெள்ளி, 18 பிப்ரவரி, 2011



கடைசி வரை இருப்பாயா என்றாய்
இதோ நான் மட்டுமே இருக்கிறேன்
உன்னை தேடிக்கொண்டு..

உன் மொழிகளில் எதை மறக்க
என எனக்கு தெரியவில்லை.

நீ பேசிய வார்த்தைகளெல்லாம்
வேதவாக்காய் தேவனின் மொழியாய்
என் இதயத்தில் வைத்து இன்னும் பூஜிக்க
உனக்கு மட்டும் என்னிடம் எப்படி சலிப்பு வந்தது.

எந்த உறவும் உன்னை கடந்து
என் நினைவை தொட அனுமதிக்காமல் நான்.
அதிகபட்ச எதிர்ப்பார்பு
உன் அன்பான வார்த்தைகள் மட்டுமே

என்னை அழவைக்காதது நீ மட்டுமே
என பெருமிதமாய் கழிந்த நாட்கள் போய்
அழதா நாட்கள் இல்லை என்ற நிலை

இன்று..,





உன் பார்வைகளை பெற்று
என் இதயத்தின் கருவறையில்
காதல் வளர்த்து வந்தேன்..
ஒரு தாய் தன் கருவை
ஆனா?பெண்ணா?என்று
தெரியாமல் சுமப்பது போல...,
நானும் என் காதல் வெற்றியா?
தோல்வியா?
என தெரியாமல் சுமக்கிறேன்....
ஆனால், என் காதல்
தோல்வி அடைந்ததால்
எந்த கள்ளிப்பால்
கொடுத்து என் காதலை
கொல்வேன்....


செவ்வாய், 11 ஜனவரி, 2011


மழையை 
ரசிப்பதாய் நினைக்கிறாய் 
நீ!.

உன்னை 
ரசிப்பதற்காகவே 
உருகி வழிகிறது மழை!!.



நீ 
என்பது 
பெரியவொரு மழைத்துளி.

மழை 
என்பது 
சின்ன சின்ன நீ!.

*

இரண்டு 
இமைகளையும் குடையாய் விரிக்கிறாய்.
பெய்யத் துவங்குகிறது 
காதல் மழை!.

*

ஜன்னல் 
கம்பிகளில் துளிர்த்த நீர்த்துளிகளை
சுண்டுவிரலால் நீ சுண்டி விடும்போது,
கம்பிகள் எல்லாம் வீணை தந்திகள் ஆகிவிட்டன!.

*

கிளிப் பேச்சு தெரியும் -
ஜன்னலோர மழையோடு பேசுகிறாயே..
இதென்ன துளிப் பேச்சா?