நீ
என்பது
பெரியவொரு மழைத்துளி.
மழை
என்பது
சின்ன சின்ன நீ!.
*
இரண்டு
இமைகளையும் குடையாய் விரிக்கிறாய்.
பெய்யத் துவங்குகிறது
காதல் மழை!.
*
ஜன்னல்
கம்பிகளில் துளிர்த்த நீர்த்துளிகளை
சுண்டுவிரலால் நீ சுண்டி விடும்போது,
கம்பிகள் எல்லாம் வீணை தந்திகள் ஆகிவிட்டன!.
*
கிளிப் பேச்சு தெரியும் -
ஜன்னலோர மழையோடு பேசுகிறாயே..
இதென்ன துளிப் பேச்சா?