சனி, 8 மே, 2010

உன்னை வரையும் பாக்கியம்
என்விரல்களில் காத்திருக்கின்றன.

என் உடலெங்கும்
நீயான ஓவியம்
ஓட்டப்பட்டள்ளது!

மௌனம்
உன் மொழியான போதும்
விழிகள் உரையாடிக்கொண்டே இருக்கிறது.

எனதான சொற்களை
உன்னில் நிரப்புகிறேன்.

நீ வெளிப்படுத்தாத புன்னகை – சில
ஸ்தம்பிப்புகளை திறந்துகொண்டு
என் இதழ்ஆரம் நிகழ்கிறது.

நீ வினோதங்கள் ஆகிறாய்,
நான் புன்னகையாகிறேன்

கண்முன் - ஒரு
பயணத்தை ஒப்படைக்கிறாய்.
அதைமேற்கொள்ள
பூக்களையும் பரிசளிக்கிறாய்

உன்னை தாங்கிக்கொள்ள
கரம் ஏந்துகிறேன்
நீ நழுவி
எனக்குள் விழுந்து கொண்டே இருக்கிறாய்
யாரும் அறியாத ரகசியமாய்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக