உனக்காக
என் ஆசைகளை
பிரிந்தபோது..,
பிரிவும் ஒரு காதல்தான்!
உனக்காக
என் கண்கள்
தூக்கத்தை பிரிந்தபோது..,
பிரிவும் ஒரு காதல்தான்!
உனக்காக
என் உறவுகளை
நான் பிரிந்தபோது..,
பிரிவும் ஒரு காதல்தான்!
எனக்கான
என் வாழ்வை
நான் மறந்தபோது..,
பிரிவுகளின் அர்த்தத்தை
உணரவைத்து பிரிதவளே!
காதலிக்கதொடங்கிவிட்டேன்
காதலாக உன் பிரிவை கூட..,