முன்பு மலராக விரிந்த
உன்மனம்- இன்று
மொட்டாக மூடிக் கொண்டது.
முன்பு அன்பாக பேசிய
உன் இதழ்கள்- இன்று
பேச மறுக்கிறது.
முன்பு பாசமாக பார்த்த
உன்பார்வை- இன்று
பார்வையை வெறுக்கிறது.
முன்பு உறங்கும் போது கனவில் வந்த
என் தேவதை- இன்று
உறங்க விடாமல் கொல்லுகிறாள்.
ஏன்
என்று என் காதலை கேட்கிறேன்
விடை சொல்லுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக