சனி, 24 ஜூலை, 2010

நேற்றைய பொழுது 
என்னோடு 
நீ 
செய்த பயணம்...
என்னுள் இன்பத்தை
மட்டுமன்று பெண்ணே..!
என் இதயத்துள்

இனிப்பையும் ஊட்டியது..!


நீ 
என்னோடு 
பேசிக் களித்த நிமிடங்களும்...
சீண்டி விளையாடிய தருணங்களும்...
செல்லமாய் அடித்த நிகழ்வுகளும்...
என்னோடு கைகோர்த்து
நடந்த நடையழகும்...


என் 
கையில் கல்வெட்டாய்
உன் காதலை பதிவுசெய்த
எழுத்தழகும்...


எனை முழுவதுமாய்
ஆட் கொண்டு விட்டன..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக