நீ மௌனிக்கிறாய்
நான் மரணிக்கிறேன்...
என் கனவுகளிலாவது
நீ புன்னகைத்துப் போயிருந்தால்
என் கவிதையில்
இத்தனை சோகங்கள்
இருந்திருக்க நியாயமில்லை
உன்னால் உயிர்த்த என் வாலிபம்
உன்னாலேயே
உதிர்ந்துவிடப் போவதிலும்
உனக்கு திருப்தி என்றால்
நீ
உதிர்த்து விட்டே போகலாம்
ஒரு பூந்தோட்டத்திற்காய்
தவமிருந்தேன் உன்னில் !
நீயோ
எறிந்து விட்டுப் போனது
கருகி விழுந்த சருகுகள்தான்
என் வினாக்களுக்கெல்லாம் பதில்கள் மௌனமா ?
சம்மத்த்தின் குறியீடு
மௌனங்கள் மட்டும் தானா ?
ஆயின்
உன் சம்மதங்கள் எனக்கு
தேவையில்லை இப்போது
வார்த்தைகளை நீ
எங்கேயடி தொலைத்தாய் ?
ஊமை பாஷையிலாவது
உன்னால்
உரையாட முடியாதா ?
என் அவஸ்தை சொல்லி
நான் அழுவதென்றால்
உன் விழிகளைக் கொஞ்சம்
கடனாகத் தா !
என் கனவுகளிலாவது
நீ புன்னகைத்துப் போயிருந்தால்
என் கவிதையில்
இத்தனை சோகங்கள்
இருந்திருக்க நியாயமில்லை.
வியாழன், 23 டிசம்பர், 2010
புதன், 15 டிசம்பர், 2010
செவ்வாய், 7 டிசம்பர், 2010
சனி, 4 டிசம்பர், 2010
வெள்ளி, 3 டிசம்பர், 2010
வியாழன், 2 டிசம்பர், 2010
கால்
நனைக்கும் அலைகளோடு
கடற்கரையில் கைகோர்த்து நடந்ததில்லை...
யாரும்
இல்லாத தனிமையில்
நடுக்கத்தோடு உதடுகளை ஒட்டியதில்லை...
ஆள்
இல்லா திரையரங்குகளில்
கார்னர் சீட்டில் கதை பேசியதில்லை...
புற நகர்
பூங்கா நாற்காலிகளில்
மடியில் தலை வைத்து படுத்ததில்லை...
கூட்டமான பஸ் பயணங்களில்
குறுஞ்செய்தி அனுப்பி கொஞ்சிக்கொண்டதில்லை...
பேய் உறங்கும் வேளையிலும்,
போர்வைக்குள் போனை ஒளித்து
பேசியதில்லை...
செல்ல சண்டைகள் போட்டு பிரிந்து
அடுத்த நாள் அனைத்தையும் மறந்து
தலை கோதியதில்லை...
பிப்ரவரி 14 க்கும்,
பிரிதொரு நாள் வரும் பிறந்த நாளுக்கும்
பரிசுகள் வாங்க மெனக்கெட்டதில்லை...
உன்
நினைவை சொல்லும்
கடிதங்களும் , காதல் பரிசுகளும்
இல்லை என்னிடம்...
நீ
போகும் பாதையில் சிந்தி செல்லும்
புன்னகையையும், பூக்களையும்தான்
சேர்த்து வைத்து இருக்கிறேன்...
தெற்று பல் தெரிய சிரிக்கும்
உன் முகம் மட்டும்தான் நெஞ்சில்
இருக்கிறது ஞாபகார்த்தமாய்...
இருந்தாலும் சந்தோசமாகத்தான் இருக்கிறேன்
சுகமாய்த்தான் இருக்கிறது இந்த தனிமையும்...
சொல்லாத காதலும் சொர்க்கம்தான்
நீ
எனக்கில்லை என சுடும்
அந்த நொடிகளை தவிர...!
நனைக்கும் அலைகளோடு
கடற்கரையில் கைகோர்த்து நடந்ததில்லை...
யாரும்
இல்லாத தனிமையில்
நடுக்கத்தோடு உதடுகளை ஒட்டியதில்லை...
ஆள்
இல்லா திரையரங்குகளில்
கார்னர் சீட்டில் கதை பேசியதில்லை...
புற நகர்
பூங்கா நாற்காலிகளில்
மடியில் தலை வைத்து படுத்ததில்லை...
கூட்டமான பஸ் பயணங்களில்
குறுஞ்செய்தி அனுப்பி கொஞ்சிக்கொண்டதில்லை...
பேய் உறங்கும் வேளையிலும்,
போர்வைக்குள் போனை ஒளித்து
பேசியதில்லை...
செல்ல சண்டைகள் போட்டு பிரிந்து
அடுத்த நாள் அனைத்தையும் மறந்து
தலை கோதியதில்லை...
பிப்ரவரி 14 க்கும்,
பிரிதொரு நாள் வரும் பிறந்த நாளுக்கும்
பரிசுகள் வாங்க மெனக்கெட்டதில்லை...
உன்
நினைவை சொல்லும்
கடிதங்களும் , காதல் பரிசுகளும்
இல்லை என்னிடம்...
நீ
போகும் பாதையில் சிந்தி செல்லும்
புன்னகையையும், பூக்களையும்தான்
சேர்த்து வைத்து இருக்கிறேன்...
தெற்று பல் தெரிய சிரிக்கும்
உன் முகம் மட்டும்தான் நெஞ்சில்
இருக்கிறது ஞாபகார்த்தமாய்...
இருந்தாலும் சந்தோசமாகத்தான் இருக்கிறேன்
சுகமாய்த்தான் இருக்கிறது இந்த தனிமையும்...
சொல்லாத காதலும் சொர்க்கம்தான்
நீ
எனக்கில்லை என சுடும்
அந்த நொடிகளை தவிர...!
புதன், 1 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)