வியாழன், 23 டிசம்பர், 2010

நீ மௌனிக்கிறாய்
நான் மரணிக்கிறேன்...

என் கனவுகளிலாவது
நீ புன்னகைத்துப் போயிருந்தால்
என் கவிதையில்
இத்தனை சோகங்கள்
இருந்திருக்க நியாயமில்லை

உன்னால் உயிர்த்த என் வாலிபம்
உன்னாலேயே
உதிர்ந்துவிடப் போவதிலும்
உனக்கு திருப்தி என்றால்

நீ
உதிர்த்து விட்டே போகலாம்

ஒரு பூந்தோட்டத்திற்காய்
தவமிருந்தேன் உன்னில் !

நீயோ
எறிந்து விட்டுப் போனது
கருகி விழுந்த சருகுகள்தான்

என் வினாக்களுக்கெல்லாம் பதில்கள் மௌனமா ?
சம்மத்த்தின் குறியீடு
மௌனங்கள் மட்டும் தானா ?
ஆயின்
உன் சம்மதங்கள் எனக்கு
தேவையில்லை இப்போது

வார்த்தைகளை நீ
எங்கேயடி தொலைத்தாய் ?
ஊமை பாஷையிலாவது
உன்னால்
உரையாட முடியாதா ?

என் அவஸ்தை சொல்லி
நான் அழுவதென்றால்
உன் விழிகளைக் கொஞ்சம்
கடனாகத் தா !

என் கனவுகளிலாவது
நீ புன்னகைத்துப் போயிருந்தால்
என் கவிதையில்
இத்தனை சோகங்கள்
இருந்திருக்க நியாயமில்லை.




புதன், 15 டிசம்பர், 2010


பூவே.. 

பறித்த பின்பும்
அழகாய்
புன்னகைக்கிறாய் நீ!


கொஞ்சம்
சொல்லிவிடேன் அந்த
ரகசியத்தை,


பக்கத்தில் சென்றாலே
பார்வையால்
முறைக்கும் என்னவளிடத்தில்..!




பிரிந்து 

செல்கிறேன் என்கிறாய்


உன் 

விருப்பத்திற்கு 

என்றாவது மறுப்பு சொல்லியிருக்கிறேனா?

போகும் முன், 


நீ 

சூடியிருந்த மலரை
என் கல்லறையில் விட்டுசெல்!




செவ்வாய், 7 டிசம்பர், 2010


நீ 
சத்தமில்லாமல்

என் 
கனவில் வந்து
முத்தம் இட்டாலும்
சட்டென்று விழிக்கின்றது

என் 
கண்கள்!



என் 
இதயத்தில்
எனக்கு தெரியாமல்

இன்னும்

உன் 
மீதான
அன்பை பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறது

எனது காதல்!


சனி, 4 டிசம்பர், 2010


நீ
விடைபெறும் வேளைகளில்
அன்பான
வார்த்தைகளையே பேசு,
ஒருவேளை

நீ 
என்னை
வாழ்வில் மறுபடியும்
சந்திக்காமலேயே
இருக்கவும் கூடும்!


வெள்ளி, 3 டிசம்பர், 2010

இருபது நிமிடம் 
தாமதமாய் வந்த
என்னைத் திட்டுகிறாய் 

நீ..,


இருபத்தியொரு வருடம் 
தாமதமாய் வந்த



உன்னை 
எதுவுமே சொல்லாமல்
அனுசரித்துக் கொள்கிறது 

என் காதல்..!



வியாழன், 2 டிசம்பர், 2010

கால் 
நனைக்கும் அலைகளோடு
கடற்கரையில் கைகோர்த்து நடந்ததில்லை...

யாரும் 

இல்லாத தனிமையில்
நடுக்கத்தோடு உதடுகளை ஒட்டியதில்லை...


ஆள் 

இல்லா திரையரங்குகளில்
கார்னர் சீட்டில் கதை பேசியதில்லை...

புற நகர் 

பூங்கா நாற்காலிகளில்
மடியில் தலை வைத்து படுத்ததில்லை...

கூட்டமான பஸ் பயணங்களில்
குறுஞ்செய்தி அனுப்பி கொஞ்சிக்கொண்டதில்லை...

பேய் உறங்கும் வேளையிலும்,
போர்வைக்குள் போனை ஒளித்து
பேசியதில்லை...

செல்ல சண்டைகள் போட்டு பிரிந்து
அடுத்த நாள் அனைத்தையும் மறந்து
தலை கோதியதில்லை...

பிப்ரவரி 14 க்கும்,
பிரிதொரு நாள் வரும் பிறந்த நாளுக்கும்
பரிசுகள் வாங்க மெனக்கெட்டதில்லை...

உன் 

நினைவை சொல்லும்
கடிதங்களும் , காதல் பரிசுகளும்
இல்லை என்னிடம்...

நீ 

போகும் பாதையில் சிந்தி செல்லும்
புன்னகையையும், பூக்களையும்தான்
சேர்த்து வைத்து இருக்கிறேன்...

தெற்று பல் தெரிய சிரிக்கும்
உன் முகம் மட்டும்தான் நெஞ்சில்
இருக்கிறது ஞாபகார்த்தமாய்...

இருந்தாலும் சந்தோசமாகத்தான் இருக்கிறேன்
சுகமாய்த்தான் இருக்கிறது இந்த தனிமையும்...

சொல்லாத காதலும் சொர்க்கம்தான்

நீ 
எனக்கில்லை என சுடும் 
அந்த நொடிகளை தவிர...!







நீ 
எனக்காக 
சொல்லும் கவிதைகளை விட

உன் 
மௌனம் 
சொல்லும் கவிதைகளே
எனக்கு பிடிக்கிறது 

ஏன் தெரியுமா...?

உன் 
மௌனத்தின் அா்த்தம் தான்
இன்னும் எனக்கு புரியவில்லை!