வியாழன், 1 ஏப்ரல், 2010

உன்
விருப்பம் எதுவென
எனக்கு தெரியாது

அழகான
அத்தனை பூக்களையும் தவிர்த்து
ஒரு பூவை
பறிக்கமுயன்ற விரல்கள்,

எப்போதுமே
உன்
எண்ணங்களில் தட்டுபடாத
உருவமாய் இருக்கிறேனா?

மனசுக்குள்
உட்கார்ந்து வாரி இறைக்கிறாய்
அத்தனை 
புழுதிகளையும் சுமந்திருக்கிறது 
சுமைதாங்கியாய் மாறிப்போன
இதயம்!

நீ
மலரும்போது 
உன்னையறியாமல் என்னில் 
கலந்துவிடுவாய் என்று 
எந்த பொழுதிற்காக காத்திருப்பது? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக