வியாழன், 1 ஏப்ரல், 2010

இன்றுமுதல்
உன்
பள்ளிக்கு மட்டும்
விடுமுறையல்ல!

உன்
இதழோர புன்னகைக்காக காத்திருந்த
எனக்கு விடுமுறை.

உன்
பார்வையின் தேடலில்
எனக்கிருந்த
சந்தோழங்களுக்கு விடுமுறை.

உன்
செய்கைகளுக்காக
நான் எழுதிய நாட்குறிப்புகளுக்கு விடுமுறை.

உன்னை
செதுக்க
நான் தீட்டிய கவிதைகளுக்கு விடுமுறை.

மொத்தத்தில்
நாம் நம்
உயிரையும்,
உணர்வையும் பரிமாறிய 
காதலுக்கும் விடுமுறை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக