ஆழமாகவே
உன்னை
விரும்பிருக்கிறேன்,
அதிகமாகவே
உன்னோடு
சண்டை இட்டிருக்கிறேன்,
ஒவ்வொரு
புன்னகையையும்
துளிவிடாமல் பதிவு செய்திருக்கிறேன்,
நான்
எப்போதும் உன்னோடு இல்லாவிட்டாலும்
என்
ஞாபகங்களை
உன்னைச்சுற்றியே திரியவிட்டிருக்கிறேன்
அனைத்து வகையிலும்
உன்னை
என்னோடு சேர்த்தே மதிப்பிட்டிருகிறேன்.
அதனால்தான்
உன் பிரிவு
என்னை வாய்விட்டு அழவைக்கிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக