புதன், 16 ஜூன், 2010

உனக்கும் 
எனக்கும் 
ஒரு வித்யாசம்...

நிஜங்கள் 
எனக்கு கை கொடுப்பதில்லை...
கனவுகள் 
உனக்கு கை கொடுப்பதில்லை...
இருந்தும்,
நம்பிக்கையின் பாதையில்,
ஊர்ந்து கொண்டிருக்கிறோம்...
சில 
உறவுகளுக்கு 
அர்த்தங்கள் இல்லை...

நீ இல்லையேல், 
வாழ்வில் அர்த்தம் இல்லை...


இந்த வார்த்தைகள்,
நேரம் தாழ்ந்தாலும்,
நேசம் தாழாது...


என் வெற்றியில் 
உன் பங்கிருக்கும்...


உன் வெற்றியில்,
நிச்சயம் என் பங்கிருக்கும்...


நேரில் பார்க்காவிட்டாலும்...
நேரம் கிறுக்கி விட்டது..


நம் நட்பை...
கிறுக்களும் காவியமாகிவிட்டது...
இது அதிசயம்...


என்றும் 
உன் அருகில் இருப்பேனா 
என்பது எனக்கு தெரியாது..

ஆனால்...


ஓடி..கலைத்து வா...
நட்பென்னும் 
நிழலை கொண்டு 
நான் நின்றிருப்பேன்...


தோழியே!
உனக்காக
உன் தோழன் என்றும்
நான் இருப்பேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக