ஞாயிறு, 27 ஜூன், 2010

எப்பொழுதாவது
ஒரு கடிதம்...
என்றாவது ஒரு
தொலைபேசி அழைப்பு...
ஆயுள் முடிவதற்குள்
ஒரு சந்திப்பு...
இவைகளில்
ஒன்றுக்காவது வாய்ப்பு கொடு
என் முதல் காதலியே!

•ஆறடிக் கூந்தலில்
ஆறு முழம் பூ
அழகாய்தான் இருக்கிறது
ஆனால்
அதன் சுமை தாங்காமல்
என் இதயம்

•இன்று
உன்னை நினைத்தாலும்
தலையறுத்தச் சேவலாய்
துடிக்கிறது
என் நெஞ்சு

•உன்னிடம்
கற்றுக் கொண்ட
காதலுக்காக
என் இதயத்தை
குருதட்சனையாக
ஏற்றுக்கொள்

•என் நினைவுகள்
உன் மடிமேல்
நீ
தலைகோத
அமைதியாக
உறங்கிக் கொண்டிருக்கிறது

•நீ அகப்படாததால்
என்
இதயம்
தூண்டில் புழுவாய்த்
தவிக்கிறது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக