திங்கள், 21 ஜூன், 2010

ஒரு 
குளிர்கால மாலை 
இருளும் வேளையில் 
சில நீர்த்துளிகள் 
புவியை நோக்கிச் சிதறின

வெளிச்சப் பறவைகள் 
தங்கள் சிறகுகளை 
முடக்கி ஓயும் வேளையில்

நிலவு 
தன் 
முகம் காட்டி நகைத்தது
 
பறவைகள் 
சில விரைவாய் 
தங்கள் கூடுகள் தேடின

மரங்கள் 
மகிழ்ச்சியாய் தங்கள் கிளைகள் விரித்தன
 
மாலை 
மங்கும் வேளையில் 
முகம் எங்கும் துளிகளாய் 
இரு மான்விழிகள் 
குறும்பாய் விழித்தன என்னை

அழகின் சாயல்கள் 
சிறிதும் குறையாமல் 
அதரங்கள் 
இரண்டு விரிந்து இசையை தெளித்தன

தோகைகளே இல்லாமல் 
இரு கால்கள் அழகாய் 
இங்கே நடை பயின்றன. 

உன்னை 
பார்த்தபோது நொடிகள் 
ஏனோ நின்று போயின...... 

சிறகுகள் சில முளைத்தன...... 
உலகம் ஏனோ சுழன்றது கீழே........ 
பொழிந்தும் பொழியாமலும்
 மழைச்சாரல்கள் வெளியே மட்டும் அல்ல.... 
உள்ளேயும் கூடத்தான்!.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக