புதன், 9 ஜூன், 2010

நரம்புகளின் 
வழியே

ஒளியூட்டப் பட்ட
விழிகளின் வெளிச்சத்தில்
இமைகள் இமைக்க
மறந்த நிலையில்..,


உன் வெட்கங்கள்
வேடிக்கை பார்க்க..,


உன் நாணமும்
என் ஆசையும் போட்டி போட..,


உன் வளைக்கரம்
வலு விழந்து
மூச்சுக் காற்று
முகவரி தேடிய பொழுதில்
சுகமாய் நடந்தேறியது

இன்றும் மறக்க முடியவில்லை


அன்று நம்மையும் அறியாது
சத்தமில்லாமல்

நம் இதழ்கள்
பிரசவித்த முதல் முத்தம்...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக