நீ மௌனிக்கிறாய்
நான் மரணிக்கிறேன்...
என் கனவுகளிலாவது
நீ புன்னகைத்துப் போயிருந்தால்
என் கவிதையில்
இத்தனை சோகங்கள்
இருந்திருக்க நியாயமில்லை
உன்னால் உயிர்த்த என் வாலிபம்
உன்னாலேயே
உதிர்ந்துவிடப் போவதிலும்
உனக்கு திருப்தி என்றால்
நீ
உதிர்த்து விட்டே போகலாம்
ஒரு பூந்தோட்டத்திற்காய்
தவமிருந்தேன் உன்னில் !
நீயோ
எறிந்து விட்டுப் போனது
கருகி விழுந்த சருகுகள்தான்
என் வினாக்களுக்கெல்லாம் பதில்கள் மௌனமா ?
சம்மத்த்தின் குறியீடு
மௌனங்கள் மட்டும் தானா ?
ஆயின்
உன் சம்மதங்கள் எனக்கு
தேவையில்லை இப்போது
வார்த்தைகளை நீ
எங்கேயடி தொலைத்தாய் ?
ஊமை பாஷையிலாவது
உன்னால்
உரையாட முடியாதா ?
என் அவஸ்தை சொல்லி
நான் அழுவதென்றால்
உன் விழிகளைக் கொஞ்சம்
கடனாகத் தா !
என் கனவுகளிலாவது
நீ புன்னகைத்துப் போயிருந்தால்
என் கவிதையில்
இத்தனை சோகங்கள்
இருந்திருக்க நியாயமில்லை.
வியாழன், 23 டிசம்பர், 2010
புதன், 15 டிசம்பர், 2010
செவ்வாய், 7 டிசம்பர், 2010
சனி, 4 டிசம்பர், 2010
வெள்ளி, 3 டிசம்பர், 2010
வியாழன், 2 டிசம்பர், 2010
கால்
நனைக்கும் அலைகளோடு
கடற்கரையில் கைகோர்த்து நடந்ததில்லை...
யாரும்
இல்லாத தனிமையில்
நடுக்கத்தோடு உதடுகளை ஒட்டியதில்லை...
ஆள்
இல்லா திரையரங்குகளில்
கார்னர் சீட்டில் கதை பேசியதில்லை...
புற நகர்
பூங்கா நாற்காலிகளில்
மடியில் தலை வைத்து படுத்ததில்லை...
கூட்டமான பஸ் பயணங்களில்
குறுஞ்செய்தி அனுப்பி கொஞ்சிக்கொண்டதில்லை...
பேய் உறங்கும் வேளையிலும்,
போர்வைக்குள் போனை ஒளித்து
பேசியதில்லை...
செல்ல சண்டைகள் போட்டு பிரிந்து
அடுத்த நாள் அனைத்தையும் மறந்து
தலை கோதியதில்லை...
பிப்ரவரி 14 க்கும்,
பிரிதொரு நாள் வரும் பிறந்த நாளுக்கும்
பரிசுகள் வாங்க மெனக்கெட்டதில்லை...
உன்
நினைவை சொல்லும்
கடிதங்களும் , காதல் பரிசுகளும்
இல்லை என்னிடம்...
நீ
போகும் பாதையில் சிந்தி செல்லும்
புன்னகையையும், பூக்களையும்தான்
சேர்த்து வைத்து இருக்கிறேன்...
தெற்று பல் தெரிய சிரிக்கும்
உன் முகம் மட்டும்தான் நெஞ்சில்
இருக்கிறது ஞாபகார்த்தமாய்...
இருந்தாலும் சந்தோசமாகத்தான் இருக்கிறேன்
சுகமாய்த்தான் இருக்கிறது இந்த தனிமையும்...
சொல்லாத காதலும் சொர்க்கம்தான்
நீ
எனக்கில்லை என சுடும்
அந்த நொடிகளை தவிர...!
நனைக்கும் அலைகளோடு
கடற்கரையில் கைகோர்த்து நடந்ததில்லை...
யாரும்
இல்லாத தனிமையில்
நடுக்கத்தோடு உதடுகளை ஒட்டியதில்லை...
ஆள்
இல்லா திரையரங்குகளில்
கார்னர் சீட்டில் கதை பேசியதில்லை...
புற நகர்
பூங்கா நாற்காலிகளில்
மடியில் தலை வைத்து படுத்ததில்லை...
கூட்டமான பஸ் பயணங்களில்
குறுஞ்செய்தி அனுப்பி கொஞ்சிக்கொண்டதில்லை...
பேய் உறங்கும் வேளையிலும்,
போர்வைக்குள் போனை ஒளித்து
பேசியதில்லை...
செல்ல சண்டைகள் போட்டு பிரிந்து
அடுத்த நாள் அனைத்தையும் மறந்து
தலை கோதியதில்லை...
பிப்ரவரி 14 க்கும்,
பிரிதொரு நாள் வரும் பிறந்த நாளுக்கும்
பரிசுகள் வாங்க மெனக்கெட்டதில்லை...
உன்
நினைவை சொல்லும்
கடிதங்களும் , காதல் பரிசுகளும்
இல்லை என்னிடம்...
நீ
போகும் பாதையில் சிந்தி செல்லும்
புன்னகையையும், பூக்களையும்தான்
சேர்த்து வைத்து இருக்கிறேன்...
தெற்று பல் தெரிய சிரிக்கும்
உன் முகம் மட்டும்தான் நெஞ்சில்
இருக்கிறது ஞாபகார்த்தமாய்...
இருந்தாலும் சந்தோசமாகத்தான் இருக்கிறேன்
சுகமாய்த்தான் இருக்கிறது இந்த தனிமையும்...
சொல்லாத காதலும் சொர்க்கம்தான்
நீ
எனக்கில்லை என சுடும்
அந்த நொடிகளை தவிர...!
புதன், 1 டிசம்பர், 2010
சனி, 27 நவம்பர், 2010
நான்
ஏன் இப்படி ?
எதற்காக காதல் வலிகளைப் பற்றியே
கவிதை எழுதிக் கொண்டிருக்கின்றேன் ?
அவள் வருவதற்கு முன்பிருந்தே
இவ்வுலகை ரசித்தேனே ?
பிறகேன் இப்படி ?
என் உலகம் இருட்டாக்கப்பட்டாலும்,
அவள் நினைவுகள்
என்னை கவிதை எழுத தூண்டுகின்றனவா ?
உனக்கு மாற்றம் வேண்டும்....
அவள் கொடுத்து விட்டுப்போன வலிகளை
மறக்கத் துவங்கு....
தொலைத்துவிட்ட வழியைத் தேடு ....
ஆயிரமாயிரம் உறுதிகள்
எனக்கு நானே
கூறிக் கொண்டே தனிமையில்
தோட்டங்களில் உலவிச்சென்றேன்,
அவள் நினைவுகள் தூரமாயின.
சில
பூக்களும்
என்னை வாழ்த்த விழைந்தன
தற்செயலாய்
அவர்களை கடந்தபோது கவனித்தேன்,
என் வலிகளை உணர்த்த ,
கைகள் எங்கும் முட்களை ஏந்திக்கொண்டிருந்தனர்,
அவள் நினைவுகளை
விட்டுப் பயணிக்க முயன்ற
என்னைப் பற்றி, ஏளனமாய்,
ஒன்றோடொன்று முகம் உரசி,
ரகசியம் பேசிக்கொண்டிருந்தன,
எனக்காக
அவள் ,
என்றோ பரிசளித்த ரோஜாச் செடிகள்.
ஏன் இப்படி ?
எதற்காக காதல் வலிகளைப் பற்றியே
கவிதை எழுதிக் கொண்டிருக்கின்றேன் ?
அவள் வருவதற்கு முன்பிருந்தே
இவ்வுலகை ரசித்தேனே ?
பிறகேன் இப்படி ?
என் உலகம் இருட்டாக்கப்பட்டாலும்,
அவள் நினைவுகள்
என்னை கவிதை எழுத தூண்டுகின்றனவா ?
உனக்கு மாற்றம் வேண்டும்....
அவள் கொடுத்து விட்டுப்போன வலிகளை
மறக்கத் துவங்கு....
தொலைத்துவிட்ட வழியைத் தேடு ....
ஆயிரமாயிரம் உறுதிகள்
எனக்கு நானே
கூறிக் கொண்டே தனிமையில்
தோட்டங்களில் உலவிச்சென்றேன்,
அவள் நினைவுகள் தூரமாயின.
சில
பூக்களும்
என்னை வாழ்த்த விழைந்தன
தற்செயலாய்
அவர்களை கடந்தபோது கவனித்தேன்,
என் வலிகளை உணர்த்த ,
கைகள் எங்கும் முட்களை ஏந்திக்கொண்டிருந்தனர்,
அவள் நினைவுகளை
விட்டுப் பயணிக்க முயன்ற
என்னைப் பற்றி, ஏளனமாய்,
ஒன்றோடொன்று முகம் உரசி,
ரகசியம் பேசிக்கொண்டிருந்தன,
எனக்காக
அவள் ,
என்றோ பரிசளித்த ரோஜாச் செடிகள்.
விழி
தேடும் வேளையில்,
மின்னலாய் வருகிறாய் ,
தேடியலைகிறேன்
என் காதலின் தடங்களை......
நீ
விட்டுச் சென்ற
மீதி உயிர்
கரைந்தோடுகின்றது,
நொடிகளை விட அசுர வேகமாய்!
தேடும் வேளையில்,
மின்னலாய் வருகிறாய் ,
தேடியலைகிறேன்
என் காதலின் தடங்களை......
நீ
விட்டுச் சென்ற
மீதி உயிர்
கரைந்தோடுகின்றது,
நொடிகளை விட அசுர வேகமாய்!
புதன், 17 நவம்பர், 2010
சனி, 30 அக்டோபர், 2010
பிரிவும் ஒரு காதல்தான்!
உனக்காக
என் ஆசைகளை
பிரிந்தபோது..,
பிரிவும் ஒரு காதல்தான்!
உனக்காக
என் கண்கள்
தூக்கத்தை பிரிந்தபோது..,
பிரிவும் ஒரு காதல்தான்!
உனக்காக
என் உறவுகளை
நான் பிரிந்தபோது..,
பிரிவும் ஒரு காதல்தான்!
எனக்கான
என் வாழ்வை
நான் மறந்தபோது..,
பிரிவுகளின் அர்த்தத்தை
உணரவைத்து பிரிதவளே!
காதலிக்கதொடங்கிவிட்டேன்
காதலாக உன் பிரிவை கூட..,
உனக்காக
என் ஆசைகளை
பிரிந்தபோது..,
பிரிவும் ஒரு காதல்தான்!
உனக்காக
என் கண்கள்
தூக்கத்தை பிரிந்தபோது..,
பிரிவும் ஒரு காதல்தான்!
உனக்காக
என் உறவுகளை
நான் பிரிந்தபோது..,
பிரிவும் ஒரு காதல்தான்!
எனக்கான
என் வாழ்வை
நான் மறந்தபோது..,
பிரிவுகளின் அர்த்தத்தை
உணரவைத்து பிரிதவளே!
காதலிக்கதொடங்கிவிட்டேன்
காதலாக உன் பிரிவை கூட..,
சனி, 16 அக்டோபர், 2010
வியாழன், 14 அக்டோபர், 2010
சனி, 9 அக்டோபர், 2010
ஞாயிறு, 3 அக்டோபர், 2010
சனி, 2 அக்டோபர், 2010
சனி, 25 செப்டம்பர், 2010
சனி, 11 செப்டம்பர், 2010
நீ
என்னை
பிரிந்துவிடுவாய்
என்று முன்பே எனக்கு
தெரிந்திருந்தால்,
பிரிந்துவிடுவாய்
என்று முன்பே எனக்கு
தெரிந்திருந்தால்,
உனக்கென்று
ஒளித்து வைத்த
என் காதல்
அனைத்தையும்
அன்றே உனக்கு
கொடுத்திருப்பேன்!
ஒளித்து வைத்த
என் காதல்
அனைத்தையும்
அன்றே உனக்கு
கொடுத்திருப்பேன்!
உன்
பெயர்சொல்லி
மூடிவைத்த
என் மீதி காதல்
அனைத்தையும்-நான்
இன்று என்ன செய்வது?
மூடிவைத்த
என் மீதி காதல்
அனைத்தையும்-நான்
இன்று என்ன செய்வது?
என்
மனதில்
பெருகி வழியும்
உன் நினைவுகளை
நான் என்ன செய்வது?
பெருகி வழியும்
உன் நினைவுகளை
நான் என்ன செய்வது?
உன்
நினைவுகளிலிருந்து
விலகி ஓடுகிறேன்
ஓடினாலும்
விலகி ஓடுகிறேன்
ஓடினாலும்
இறுதியில்
உன் நினைவின்
வாசலிலே வந்து
நிற்க வைத்து விடுகிறாய்!
உன் நினைவின்
வாசலிலே வந்து
நிற்க வைத்து விடுகிறாய்!
என்
மனதின்
ஒவ்வொரு
அசைவிலும் உன்னையே
உணர்ந்து கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு
அசைவிலும் உன்னையே
உணர்ந்து கொண்டிருக்கிறேன்
உன் மௌனத்தின் குரல்களே
இன்னமும் என்னில்
ஒலித்துக்கொண்டிருக்கிறது
இன்னமும் என்னில்
ஒலித்துக்கொண்டிருக்கிறது
உனை பிரிந்து
காலங்கள் பல கடந்துவிட்டது
காலங்கள் பல கடந்துவிட்டது
இன்றும் என்னிடம்
எதுவேமே இல்லை!
“நீ”– என்ற சொல்லைத் தவிர!!!
எதுவேமே இல்லை!
“நீ”– என்ற சொல்லைத் தவிர!!!
திங்கள், 30 ஆகஸ்ட், 2010
விழித்திருக்கும் நேரத்தில்
விழிகளை விட்டு
கண்ணீராய் உன் நினைவுகள்..
ஆளுக்கொரு மூலையிலே
கனவுகளை நட்டு விட்டு
சொந்தங்களை விட்டு விட்டு...
மணிக்கணக்கில் பேச நினைத்தாலும்
”Money” கணக்கில் இல்லாததால்
மலடானது நம் பேச்சு..
வருடத்திற்கு ஒரு முறை
வந்துப் போனாலும்
நொந்துப் போகும் மனது..
எந்திரமான வாழ்க்கைக்கு
தந்திரமாய் நீ தரும்
அழுகையோடு சேர்ந்த முத்தம்..
மணலும் மணல் சார்ந்த இடம் பாலை;
மாற்றி அமைப்போம்
இனி பிரிவும் துயரும் சார்ந்த இடம்;
விழிகளை விட்டு
கண்ணீராய் உன் நினைவுகள்..
ஆளுக்கொரு மூலையிலே
கனவுகளை நட்டு விட்டு
சொந்தங்களை விட்டு விட்டு...
மணிக்கணக்கில் பேச நினைத்தாலும்
”Money” கணக்கில் இல்லாததால்
மலடானது நம் பேச்சு..
வருடத்திற்கு ஒரு முறை
வந்துப் போனாலும்
நொந்துப் போகும் மனது..
எந்திரமான வாழ்க்கைக்கு
தந்திரமாய் நீ தரும்
அழுகையோடு சேர்ந்த முத்தம்..
மணலும் மணல் சார்ந்த இடம் பாலை;
மாற்றி அமைப்போம்
இனி பிரிவும் துயரும் சார்ந்த இடம்;
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)